TNPSC Thervupettagam

பள்ளி காலை உணவுத் திட்டம் பெயர் மாற்றம்

July 25 , 2026 5 days 97 0
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனத் தமிழ்நாடு அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது.
  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக இத்திட்டம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப் பட்டது.
  • இது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • காமராஜரின் பிறந்தநாளான 2026 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் இந்தப் பெயர் மாற்ற ஆணை வெளியிடப்பட்டது.
  • விரிவாக்கப்பட்ட இத்திட்டம் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமியின் பிறந்தநாளான 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 34.48 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்