பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் இணைய வழி அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட வன்முறை மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு எதிரான சர்வதேச தினம் - நவம்பர் 02
November 5 , 2023 963 days 355 0
2019 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ அமைப்பின் 193 உறுப்பினர் நாடுகள் ஆனது, நவம்பர் மாதம் முதல் வியாழக்கிழமையை இதற்கான தினமாக அனுசரிப்பதற்கான ஒரு அறிவிப்பினை வெளியிட்டன.
பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் இணைய வழி அச்சுறுத்தல்கள் ஆகியவை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் கல்வி மற்றும் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான உரிமைகளை மீறுவதாகும் என்பதை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு பயத்திற்கு இடமில்லை: சிறந்த மன நலம் மற்றும் கற்றலுக்காக பள்ளிகளில் நிலவும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வருதல் என்பதாகும்.