கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் இந்தியப் பழங்குடியினர் சமூகங்களின் மீதான அரசுத் திட்டங்களின் தாக்கம் குறித்த ஒரு அறிக்கையை இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனம் (ASI - Anthropological Survey of India) சமர்ப்பித்துள்ளது.
ASI ஆனது கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இது மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயிரி-கலாச்சார ஆய்வுகளின் மானுடவியல் ஆராய்ச்சிக்கான ஒரு முதன்மையான ஆராய்ச்சி அமைப்பாகும்.