TNPSC Thervupettagam

பவன் தியாகிகளுக்கு முதல் அதிகாரப்பூர்வ அஞ்சலி

November 28 , 2025 7 days 47 0
  • இந்திய இராணுவமானது, 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பவன் நடவடிக்கையில் உயிரிழந்த தியாகிகளை அதிகாரப்பூர்வமாக நினைவு கூர்கிறது.
  • ஆபரேஷன் பவன் என்பது சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் முக்கிய வெளிநாட்டு இராணுவ நடவடிக்கையாகும் என்பதோடு இது 1987 முதல் 1990 ஆம் ஆண்டு வரை இலங்கையில் நடத்தப்பட்டது.
  • இந்தோ-இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உள்ளிட்ட போராளிக் குழுக்களின் ஆயுத நீக்கத்தினை இது நோக்கமாகக் கொண்டது.
  • இதில் 1,171 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதோடு 3,500க்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்தனர் என்ற நிலையில் இது வெளிநாடுகளில் இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கால இழப்புகளில் ஒன்றாகும்.
  • மேஜர் இராமசாமி பரமேஸ்வரன் 1987 ஆம் ஆண்டில் அவரது துணிச்சலுக்காக பரம் வீர் சக்ரா விருதைப் பெற்றார்.
  • புது டெல்லியில் உள்ள தேசியப் போர் நினைவிடத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்