இந்த ஒரு முன்னெடுப்பானது, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், பப்புவா நியூ கினியா, தைமோர்-லெஸ்டே ஆகிய ஆறு நாடுகளின் பலதரப்புக் கூட்டாண்மை ஆகும்.
பெரும்பாலும் 'கடல்களின் அமேசான்' என்றும் அழைக்கப்படும் இந்தப் பவளப்பாறை முக்கோணப் பகுதியானது ஒரு கடல் சார் பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாகும்.
இங்கு 15 தனித்துவமான இனங்கள் காணப்படுகின்றன மற்றும் உலகளாவியப் பவளப் பாறை வாழ் மீன் இனங்களில் இங்கு சுமார் 37% காணப்படுவதுடன், உலகின் மிகவும் அதிகப் பன்முகத் தன்மை கொண்ட பவளப்பாறை வாழ் மீன்களைக் கொண்டுள்ளது.
புவியின் மேற்பரப்பில் சுமார் 1.5% பரப்பில் மட்டுமே இது பரவிக் காணப் பட்டாலும் இப்பவளப் பாறை முக்கோணப் பகுதியானது புவியின் பவளப்பாறைகளில் சுமார் 30 சதவீதத்தினைக் கொண்டுள்ளது.
இந்தத் தினத்திற்கான இந்த ஆண்டின் கருத்துரு “One Triangle, Infinite Beauty”என்பதாகும்.