TNPSC Thervupettagam

பாங்கி பிஹாரி ஜி மகாராஜ் கோயில் குழு

August 15 , 2025 6 days 45 0
  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாக்கூர் ஸ்ரீ பாங்கி பிஹாரி ஜி கோயிலின் நிர்வாகக் குழுவை உச்ச நீதிமன்றம் இடை நீக்கம் செய்தது.
  • கோயிலின் அன்றாட விவகாரங்களை நிர்வகிப்பதற்காக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அசோக் குமார் தலைமையில் ஓர் உயர் அதிகாரக் குழு அமைக்கப்பட்டது.
  • இராஜா ரத்தன் சிங் கொடையாக அளித்த நிலத்தில், 1864 ஆம் ஆண்டில் ஒரு பிரபலமான இந்து யாத்திரைத் தலமாக விளங்கும் இந்தக் கோயில் கட்டப்பட்டது.
  • இராஜ் போக் மற்றும் ஷயான் போக் என அழைக்கப்படும் இரண்டு பிரிவுகளுக்கு இடையேயான நீண்டகாலத் தகராறுகள் 1938 ஆம் ஆண்டிலிருந்து இந்தக் கோயில் நிர்வாகத்தைப் பாதித்துள்ளன.
  • 2016 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு ஆனது, தொடர்ச்சியானத் தகராறுகளுக்கு மத்தியில் மதுராவின் உரிமையியல் நீதிமன்றத்திற்கு இறுதி நிர்வாக ஒப்புதல்களை வழங்கியது.
  • 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆனது, பல பேர் காயமடையவும், உயிரிழக்கவும் வழிவகுத்தது. இது பொது நல வழக்கு மற்றும் ஒரு சுயாதீன அறக்கட்டளைக்கான மாநிலத்தின் முன்மொழிவிற்கு வழிவகுத்தது.
  • உச்ச நீதிமன்றம் ஆனது, 2025 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச ஸ்ரீ பாங்கி பிஹாரி ஜி கோயில் அறக்கட்டளை அவசரச் சட்டத்தினை இடை நிறுத்தியதால், உயர் நீதிமன்ற மறு ஆய்வு நிலுவையில் உள்ளது.
  • இந்தச் சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியதோடு, இதன் அனைத்து சவால் மனுக்களையும் உயர் நீதிமன்றத்தின் முடிவின் கீழ் வைத்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்