TNPSC Thervupettagam

பாதரச நிரப்புதல் செயல்முறைக்குத் தடை 2034

November 13 , 2025 2 days 38 0
  • உலகெங்கிலும் உள்ள நாடுகள் 2034 ஆம் ஆண்டிற்குள் பாதரசம் சார்ந்த பல் பூச்சுக் கலவையைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துவதற்கு பாதரசம் குறித்த மினாமாட்டா உடன்படிக்கையின் கீழ் ஒப்புக் கொண்டுள்ளன.
  • பாதரச மாசுபாட்டிலிருந்து மனித ஆரோக்கியத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க ஜெனீவாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் இந்த முக்கியமான முடிவு எடுக்கப் பட்டது.
  • பாதரசம் குறித்த மினாமாட்டா உடன்படிக்கை 2013 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டு 2017 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த உடன்படிக்கையில் உறுப்பினர்களாக உள்ளன.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) மனித ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும் முதல் பத்து இரசாயனங்களில் பாதரசத்தையும் ஒன்றாகப் பட்டியலிடுகிறது.
  • சருமத்தைப் பொலிவுறச் செய்யும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சிறிய அளவிலான தங்கச் சுரங்கங்களில் பாதரசத்தைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வருவதையும் இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்