பாதுகாப்பான தாய்மார்களுக்கான தேசிய தினம் - ஏப்ரல் 11
April 16 , 2025 247 days 164 0
இத்தினமானது 2003 ஆம் ஆண்டு ஒயிட் ரிப்பன் அலையன்ஸ் இந்தியா (WRAI) அமைப்பு மூலம் நிறுவப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த கஸ்தூரிபா காந்தியின் (M.K. காந்தியின் மனைவி) பிறந்த நாளைக் குறிக்கிறது.
கர்ப்பத்திற்கு முன், கர்ப்பத்தின் போது மற்றும் கர்ப்பத்திற்குப் பின் என மகப்பேறு கால ஆரோக்கியம் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது ஒரு முதன்மை நோக்கமாகக் கொண்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "Healthy Beginnings, Hopeful Futures" என்பது ஆகும்.