பாதுகாப்புத் துறைக் கண்காட்சி 2022
September 5 , 2021
1364 days
534
- அடுத்த பாதுகாப்புத் துறைக் கண்காட்சியானது 2022 ஆம் ஆண்டில் குஜராத் மாநில அரசினால் நடத்தப்படும்.
- முதலமைச்சர் விஜய் ரூபானி அவர்கள் இதனை அறிவித்தார்.
- பாதுகாப்புத் துறை கண்காட்சி 2022 ஆனது காந்தி நகரில் நடத்தப்படும்.
- இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமானது இந்தியாவில் தயாரித்தல் என்ற நிலையிலிருந்து உலகத்திற்காக தயாரித்தல் என்ற நிலையை அடைவதே ஆகும்.
- இந்தியாவினை ஒரு பாதுகாப்புத் துறை உற்பத்தி மையமாக உருவாக்குவதில் இது ஈடுபாடு செலுத்தும்.
குறிப்பு
- பாதுகாப்புத்துறை கண்காட்சியானது 2014 ஆம் ஆண்டு வரை பாரம்பரியமாக டெல்லியில் நடத்தப்பட்டது.
- 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கோவா (2016), சென்னை (2018) மற்றும் லக்னோ (2020) ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.

Post Views:
534