பாதுகாப்புப் படைகளின் புதியத் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹான் அவர்களை (ஓய்வு பெற்றவர்) அரசாங்கம் நியமித்துள்ளது.
40 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றிய அனில் சவுகான் அவர்கள் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.
நாட்டின் முதலாவது பாதுகாப்புப் படைகளின் முதலாவது தலைவரான ஜெனரல் பிபின் ராவத் அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதியன்று நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அந்தப் பதவி காலியாக இருந்தது.