இந்தியாவில் பாரத் ஆளில்லா விமானங்கள் மஹோத்சவ் என்று அழைக்கப்படும், 2022 ஆம் ஆண்டு ஆளில்லா விமானங்கள் திருவிழாவானது நடத்தப்பட்டது.
டெல்லியில் நடத்தப் பட்ட இரண்டு நாட்கள் அளவிலான பாரத் ட்ரோன் மஹோத்சவ் (2022) இந்தியாவின் மிகப்பெரிய ஆளில்லா விமானங்கள் குறித்த ஒரு திருவிழாவாகும்.
பிரதமர் அவர்கள் சமீபத்தில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறு நகரங்கள் மற்றும் நகரங்களில் வேளாண் நிலங்கள் மீது பூச்சிக் கொல்லிகளைத் தெளிப்பதற்காக 100 கிசான் ட்ரோன்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
கிசான் ட்ரோன் சுவிதா என்ற ஒரு திட்டமானது நாட்டின் வேளாண் துறையை மேம்படுத்துவதையும் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.