பாரத் – பங்களா சுற்றுலா விழா (Bharat Bangla Tourism Festival)
February 24 , 2020 2247 days 890 0
திரிபுராவின் அகர்தலாவில் முதலலாவது பாரத் – பங்களா பரியதன் உட்சவ் – சுற்றுலா விழா (Bharat Bangla Paryatan Utsav - Tourism Festival) நடைபெறுகின்றது.
திரிபுரா அரசின் சுற்றுலாத் துறையால் இவ்விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது.
1971 ஆம் ஆண்டில் நிகழ்ந்த வங்கதேச விடுதலைப் போரில் திரிபுராவின் பங்களிப்பின் நினைவாக இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
திரிபுராவில் சுற்றுலாவை மேம்படுத்துவதும் அண்டை நாடான வங்கதேசத்தில் வாழும் மக்களை திரிபுராவில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஈர்ப்பதும் இந்த விழாவின் நோக்கமாக விளங்குகின்றது.