மதுரையின் திருப்பரங்குன்றம் தாலுக்காவில் உள்ள வளையங்குளம் கிராமத்தில் கிராமியக் கலை வடிவங்களுக்கான பயிற்சிப் பள்ளியைத் தொடங்க தமிழக அரசு நிலம் வழங்க உள்ளது.
பள்ளியை அமைப்பதற்காக, பறையிசைக் கலைஞரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான R. வேல்முருகனின் கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டார்.
2026–27 ஆம் ஆண்டில் புதிய முதுகலைப் படிப்பு தொடங்கும் என்ற நிலையில்மேலும் பல்கலைக் கழகத்திற்கான நிதி உதவி 3 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக அதிகரிக்கும்.
இசை மற்றும் நுண்கலை/கவின்கலை மாணவர்களுக்காக ‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
நடிகர் சிவகுமார் மற்றும் கலைஞர் சந்துரு ஆகியோருக்கு முதலமைச்சர் கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்திற்கான மூன்றாவது பட்டமளிப்பு விழாவின் போது இது வழங்கப் பட்டது.