வரவிருக்கின்ற மக்களவைத் தேர்தல்களில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்ற வாக்காளர்களுக்கு பிரெய்லி வாக்குச் சீட்டுகள் வழங்கப்படவிருக்கின்றன.
பிரெய்லி முறை என்பது பார்வையற்ற அல்லது குறைவான பார்வை கொண்ட மக்களால் தமது விரல்கள் உதவியுடன் தடிமனான புள்ளிகளைப் படிக்க உதவும் முறையாகும்.
சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்களிலும் பிரெய்லி முறையிலான வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே பிரெய்லி அம்சத்தைக் கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்தோடு இயந்திரத்தின் மீது ஒட்டப்பட்டிருக்கும் வாக்குச் சீட்டு பிரெய்லி முறையோடு ஏற்படுத்தப்பட்டதாகும்.
மேலும் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் உள்ள பார்வைக் குறைபாடு கொண்ட வாக்காளர்களுக்கு பிரெய்லி முறையோடு கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளைத் தருவதற்கும் திட்டம் தீட்டியிருக்கின்றது.