பார்வையின்மைக்குச் சிகிச்சையளிக்க முதன்முறையாகப் மரபணு மாற்றக் கருவி
March 6 , 2020 2298 days 799 0
அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள ஓரிகான் பல்கலைக்கழகத்தில் பார்வையின்மைக்குச் சிகிச்சையளிக்க CRISPR எனப்படும் மரபணு மாற்றக் கருவியானது முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது.
இருப்பினும், நோயாளியின் பார்வை மீட்கப்பட்டுள்ளதா எனச் சோதிக்க ஒரு மாதம் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மரபணு மாற்ற நுட்பமானது டி.என்.ஏ ஒரு நபரின் உடலுக்குள் இருக்கும் போதே மரபணுவைத் திருத்த முயற்சிக்கின்றது.