பாலஸ்தீன மக்களுடனான சர்வதேச ஒற்றுமை நாள் - நவம்பர் 29
November 30 , 2019 2214 days 897 0
1947 ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுச் சபையானது பாலஸ்தீனத்தை அரபு அரசு மற்றும் யூத அரசாகப் பிரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிய நாளைக் குறிக்கும் விதமாக 1977 ஆம் ஆண்டில் இந்த தினம் நிறுவப் பட்டது.
இந்த நாள் 1978 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப் படுகின்றது.
பாலஸ்தீனிய மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமை, சுதந்திரம் மற்றும் இறையாண்மையை அடைவதற்கான அவர்களின் தற்போதையப் போராட்டத்தில் ஐ.நா. அமைப்பு மேற்கொள்ளும் உறுதியான அர்ப்பணிப்புகளின் வெளிப்பாடாக இந்த நாள் கருதப் படுகின்றது.