உச்ச நீதிமன்றமானது, பாலியல் ரீதியிலான தொழிலுக்கு"தொழில்" என்ற ஒரு தகுதி நிலையினை வழங்கி அதனை அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே, நாடு முழுவதும் உள்ள இந்தத் தொழில் செய்யும் நபர்களுக்கு இந்தியச் சட்டத்தின் கீழ் ஒரு சமமானப் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்கையினைப் பெறுவதற்கும் உரிமை உண்டு.
பாலியல் தொழிலாளியின் குழந்தைகளை, அவர்களின் தொழிலினை மட்டுமே காரணம் காட்டி தாயிடமிருந்துப் பிரிக்கக் கூடாது.
பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கண்ணியம் மற்றும் நற்பாங்கு ஆகிய அடிப்படைப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.