தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமானது “பால் சுவராஜ்” எனும் இணைய தளத்தைத் தொடங்கியுள்ளது.
இது கோவிட்-19 தொற்றினால் தனது பெற்றோரில் ஒருவரையோ அல்லதுஇருவரையுமே இழந்த குழந்தைகள் மீதான நிகழ்நேரக் கண்காணிப்பிற்கான ஒரு இணைய கண்காணிப்புத் தளமாகும்.
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமானது (National Commission for Protection of Child Rights – NCPCR) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாகும்.
NCPCR ஆனது, 2015 ஆம் ஆண்டு இளஞ்சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் அனைத்து குழந்தைகளின் உரிமை குறித்து கண்காணிப்பு அதிகாரம் உடைய ஒரு அமைப்பாகும்.