பாளையங்கோட்டையில் உள்ள புனித திருத்துவ கதீட்ரலில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கோபுர கடிகாரம் மீட்டெடுக்கப்பட்டு மீண்டும் ஒலிக்கத் தயாராக உள்ளது.
இந்த கடிகாரம் 1854 இல் தயாரிக்கப்பட்டு 1855 இல் நிறுவப்பட்டது என்பதோடு, இது 1859 இல் நிறுவப்பட்ட லண்டனில் உள்ள பிக் பென்னுக்கு முந்தையது.
இந்தக் கடிகாரத்தில் நிறுவப்பட்ட ஆண்டு 1854 என பொறிக்கப்பட்டுள்ளது என்பதோடு மேலும் இது லண்டனை தளமாகக் கொண்ட கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான ஜான் மூர் & சன்ஸ் ஆல் அமைக்கப்பட்டது.
பேராயர் சார்லஸ் தியோபிலஸ் எவால்ட் ரேனியஸால் 1826 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கதீட்ரல் சமீபத்தில் அதன் இருநூறாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.