TNPSC Thervupettagam

பிஜு பட்நாயக் நினைவுச் சின்னம்

May 10 , 2025 20 hrs 0 min 47 0
  • மறைந்த பிஜு பட்நாயக்கிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னமானது புது டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஸ்டாலின்கிராட் என்ற போரில் பிஜு பட்நாயக்கின் பங்கைக் கௌரவிக்கும் வகையில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப் பட்டுள்ளது.
  • பட்நாயக் 1936 ஆம் ஆண்டில் ராயல் இந்திய விமானப்படையில் இணைந்தார்.
  • அவர் மிகப்பெரும்பாலும் 'டகோட்டா' என்று பொதுவாக அழைக்கப்பட்ட டக்ளஸ் C-47 ஸ்கைட்ரெய்ன் போன்ற தளவாட விநியோக மற்றும் போக்குவரத்து விமானங்களை இயக்கினார்.
  • ரங்கூனில் இருந்து பிரிட்டிஷ் அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
  • சீனாவின் சியாங் காய் ஷேக்கிற்கு உதவுவதற்காக பட்நாயக் தளவாட விநியோக விமானங்களையும் இயக்கினார்.
  • 1997 ஆம் ஆண்டில் அவர் உயிரிழந்த போது, அவரது சவப்பெட்டியானது இந்தியா, இந்தோனேசியா (அதன் சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் உதவியிருந்தார்) மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று வெவ்வேறு நாடுகளின் தேசியக் கொடிகளால் மூடப்பட்டு இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்