இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வகமான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு ஏவுகலன் அமைப்பான “பினாகாவை” இராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த ஆயுத அமைப்பானது மேம்படுத்தப்பட்ட வழிகாட்டல் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டுள்ள மேம்பட்ட வழிகாட்டு கருவியைக் கொண்டுள்ளது.