உலகின் முதல் நிரந்தர அணுக்கழிவு சேமிப்பு கிடங்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர பின்லாந்து தயாராகி வருகிறது.
'ஆன்கலோ' என்று அழைக்கப்படும் இந்த வசதி, ஓல்கிலுவோடோ (Olkiluoto) தீவில் அமைந்துள்ளது.
இது பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை 100,000 ஆண்டுகள் வரை சேமித்து வைக்கும்.
இது பல்-அடுக்கு பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி (உலோக குப்பிகள், செப்பு குப்பிகள், பெண்டோனைட் களிமண், பாறை அடுக்குகள்) நிலையான அடித்தளத்தில் 400-450 மீட்டர் நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளது.
பெண்டோனைட் களிமண் தண்ணீருடன் தொடர்பு கொள்ளும்போது விரிவடந்து, கதிரியக்கப் பொருள் கசிவதைத் தடுக்கிறது.
இந்த சேமிப்பு கிடங்கு செயலற்றநிலை பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது மனித பராமரிப்பு இல்லாமலேயே இது பாதுகாப்பாக இருக்கும்.
உலகளவில் பாதுகாப்பாகவும் நீண்டகால அடிப்படையிலும் கழிவுகளை அகற்றுவதற்கான ஒரு மாதிரியை வழங்கும் வகையில் சுமார் 6,500 டன் அணுக் கழிவுகளை சேமிக்க பின்லாந்து திட்டமிட்டுள்ளது.