TNPSC Thervupettagam

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்

July 17 , 2019 2126 days 951 0
  • 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் 2019 ஆம் ஆண்டு மார்ச் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிரதம மந்திரி ரோஜ்கர் புரோட்சகன் யோஜனா (PMRPY - Pradhan Mantri Rojgar Protsahan Yojana) என்ற திட்டத்தின் கீழ் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலையில் இணைந்துள்ளனர்.
  • மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து 57 சதவிகிதம் நபர்கள் தொழிலாளர் சக்தியில் இணைந்துள்ளனர்.
  • PMRPY திட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளுக்கு அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த புதிய தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றிற்கான பணியளிப்பவரின் ஒட்டுமொத்தப் பங்களிப்பினையும் (12 சதவிகிதம் அல்லது தகுந்தாற்போல்) அரசே செலுத்துகின்றது.
  • PMRPY ஆனது வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக பணியளிப்பவர்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்