பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா
September 17 , 2021
1435 days
1084
- பழங்குடியினர் விவகார அமைச்சர் அர்ஜுன் முண்டா சமீபத்தில் இத்திட்டத்தினை அறிவித்தார்.
- இந்த அமைச்சகமானது நாடு முழுவதுமுள்ள 36000 கிராமங்களில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா என்ற திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
- 50% பழங்குடியினர் மக்கள்தொகையைக் கொண்ட கிராமங்களுக்கு இந்தக் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் அசாமிலுள்ள சுமார் 1700 பழங்குடியினர் கிராமங்கள் மாதிரி கிராமங்களாக மாற்றப்படும்.
- பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா என்பது ஓர் ஊரக மேம்பாட்டுத் திட்டமாகும்.
- இது 2009-10 ஆம் நிதியாண்டில் அதிக விகிதத்தில் பட்டியல் சாதியினரை (50%க்கும் மேல்) கொண்ட கிராமங்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசினால் தொடங்கப் பட்டது.

Post Views:
1084