2019-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் உறுதியளிக்கப்பட்ட வருமான ஆதரவை அளிப்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேர் வரை சாகுபடி செய்யக்கூடிய நிலம் வைத்திருக்கும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள விவசாயக் குடும்பங்கள் வருடத்திற்கு 6000 ரூபாய் அளவில் நேரடி வருமான உதவி அளிக்கப்படுவர்.
இந்த வருமான ஆதரவு 2000 ரூபாய் என்று மூன்று சரிசமமான தவணைகளாக விவசாயப் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணப்பரிமாற்றம் செய்யப்படும்.
இத்திட்டம் 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் முதல் தவணை 2019-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்தப்படும்.