பிரதமர் மோடி பிரதான் மந்திரி கிசான் மான் தன் யோஜனா (Pradhan Mantri Kisan Maan Dhan Yojana - PM-KMY) என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கினார்.
PM-KMY என்பது நாட்டில் உள்ள நிலம் வைத்துள்ள அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான (Small and Marginal Farmers - SMFs) ஒரு முதியோர் ஓய்வூதியத் திட்டமாகும்.
இது 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளுக்கான ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்புத் திட்டமாகும். இதில் விவசாயிகள் 60 வயதை எட்டும்போது மாத ஓய்வூதியமாக ரூ. 3000 வழங்கப்படும்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் ஓய்வூதிய நிதி மேலாளராகவும் ஓய்வூதிய நிதி வழங்குதலுக்கு பொறுப்புமிக்க அமைப்பாகவும் இருக்கும்.