பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா 3.0
January 18 , 2021
1612 days
580
- இது 2020-21 ஆம் ஆண்டுத் திட்டக் காலக் கட்டத்தின் போது 8 இலட்சம் நபர்களுக்கு பயிற்சியளிப்பதின் மீது கவனம் செலுத்த உள்ளது.
- இது மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சகத்தால் மேற்கொள்ளப் படுகின்றது.
- இது புதிய இந்தியா மற்றும் கோவிட் தொடர்பான திறன்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகின்றது.
- 3வது கட்டத்தின் கீழ், 729 பிரதான் மந்திரி கௌசல் கேந்திரா மையங்கள் அமைக்கப் படவுள்ளன.
- 200ற்கும் மேற்பட்ட ஐடிஐ நிறுவனங்கள் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப் படவுள்ளன.
- பிரதமர் 2015 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று திறன் இந்தியா திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
- இந்தத் திட்டமானது பிரதான் மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா தொடங்கப் பட்டதின் மூலம் உத்வேகம் பெற்றுள்ளது.
- திறன் மேம்பாடு குறித்த தேசியக் கொள்கையானது 2022 ஆம் ஆண்டில் 50 கோடி மக்களுக்கு திறன் அளிப்பதற்கான இலக்கு ஒன்றை நிர்ணயித்துள்ளது.

Post Views:
580