2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனாவின் (PMJDY - Pradhan Mantri Jan Dhan Yojna) 6வது ஆண்டாவது தற்பொழுது அனுசரிக்கப் பட்டது.
PMJDY-ன் நோக்கம் வங்கியல் சேமிப்பு வைப்புக் கணக்குகள், பணம் அனுப்புதல் (தாய் நாட்டிற்கு), கடன், காப்பீடு, எளிய முறையில் ஓய்வூதியம் வழங்குதல் போன்ற நிதியியல் சேவைகளை அணுகுவதை உறுதி செய்வதாகும்.
PMJDY-ன் முழக்கம், “மேரா காட்டா - பாக்யா விதாத்தா” என்பதாகும்.
பின்னர் இது “ஒவ்வொரு குடும்பம்” என்ற நிலையிலிருந்து “வங்கிச் சேவை பெறாத அனைத்துப் பதின்மர்” என்ற நிலையின் மீது கவனம் செலுத்துகின்றது.
இது மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் கீழ் நிதியியல் சேவைத் துறையினால் செயல்படுத்தப் படுகின்றது.
கைபேசிச் செயலியான ஜன் தன் தர்ஷக் என்ற ஒரு செயலியானது வங்கிக் கிளைகள், ஏடிஎம்கள் போன்ற வங்கிச் சேவை இடங்களைக் காண்பிப்பதற்கான குடிமக்களை மையமாகக் கொண்ட ஒரு தளத்தை அளிப்பதற்காகத் தொடங்கப் பட்டு உள்ளது.