குழந்தைகளுக்கான தேசிய விருதுகள் என்பது பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் என சீரமைக்கப்பட இருக்கின்றது. இது சாகச விருதுகள் பிரிவையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
கடந்த ஆண்டு வரையில் தேசிய சாகச விருதுகள் பிரிவு "குழந்தைகள் நலனிற்கான இந்தியக் குழுமம்" என்ற அரசு சாரா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டன.
2019 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் என்ற விருதிற்காக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் 26 நபர்களை வரிசைப்படுத்தியுள்ளது.
இந்த விருதுகள் குடியரசுத் தினத்தோடுத் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியில் ஜனவரி 22-ம் தேதியன்று இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படும்.
சாகசப் பிரிவைத் தவிர இதரப் பிரிவுகளில் உள்ள குழந்தைகளுக்கு முன்னர் குழந்தைகள் தினத்தன்று தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.