நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த போது பிரதான் மந்திரி விஸ்வகர்மா கௌஷல் சம்மான் திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் கைவினைஞர்கள் தங்கள் தயாரிப்புகளின் தரம், அளவு மற்றும் பரவலை மேம்படுத்தி, அவர்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை நிறுவனங்களின் (MSME) மதிப்புச் சங்கிலியுடன் ஒருங்கிணைக்க உதவும்.
திறன் பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் கடன் வழங்கீடு ஆகியவை மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை வெளிக் கொணர்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.