பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் பிரதான் மந்திரி சங்க்ரஹாலயா எனும் அருங்காட்சியகத்தினைத் திறந்து வைத்தார்.
புகழ்பெற்ற தீன் மூர்த்தி வளாகத்தில் அமைந்துள்ள சங்கரஹாலயா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவின் (ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்) ஒரு பகுதியாக திறக்கப் பட்டது.
இந்த அருங்காட்சியகம் ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன்சிங் வரையிலான 14 பிரதமர்களின் பதவிக் காலத்தினை ஞாபகப் படுத்துகிறது.
இது சுதந்திரம் வாங்கியதில் இருந்து இந்தியாவின் அனைத்துப் பிரதமர்களுக்கான ஒரு நினைவிடமாக இருக்கும்
இந்த அருங்காட்சியகமானது, ஒவ்வொரு பிரதமரும் எதிர்கொண்ட துன்பங்களையும், அவற்றைச் சமாளித்து புதிய இந்தியாவிற்கான அடித்தளத்தை அமைப்பதில் அவர்கள் எவ்வாறு வெற்றியடைந்தார்கள் என்பதையும் இளைஞர்கள் அறிய வழிவகை செய்யும் வகையில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு மூல ஆதாரமாகத் திகழும்.