லக்னோவில் நிறுவப்பட உள்ள பிரம்மோஸ் வான்வெளி ஏவுகணை தயாரிப்புப் பிரிவுக்குப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
லக்னோவில் நிறுவப்பட உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் சோதனை மையத்திற்கும் அவர் அடிக்கலை நாட்டினார்.
பிரம்மோஸ் என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் ரஷ்யாவின் NPOM அமைப்பு ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சி ஆகும்.
பிரம்மோஸ் ஏவுகணைக்கு இந்தியாவின் பிரம்மபுத்திரா நதி மற்றும் ரஷ்யாவின் மோஸ்க்வா நதி ஆகியவற்றிலிருந்துப் பெயரிடப்பட்டது.