ராம் நாத் கோவிந்த் தனது மனைவியுடன் பிரயாக்ராஜ்ஜில் உள்ள சங்கமத்தில் பிரார்த்தனைகளை மேற்கொண்டதன் மூலம் கும்ப மேளாவிற்கு ராஜேந்திர பிரசாத்திற்குப் பிறகு வருகை தந்த முதல் ஜனாதிபதியாக உருவெடுத்திருக்கின்றார்.
மேலும் குடியரசுத் தலைவர் பரமார்த்த நிகேதன் முகாமில் மூன்று நாட்கள் நடைபெறும் காந்திய மறுமலர்ச்சி மாநாட்டையும் துவக்கி வைத்தார்.
450 ஆண்டுகளுக்குப் பிறகு சாதாரண மனிதர்களுக்காக அக்சய வத் என்ற புனித மரத்தையும், சரஸ்வதி கூப் எனப்படும் புனித கிணற்றையும் பக்தர்களுக்குத் திறந்து விட்டமைக்காக 2019-ம் ஆண்டின் பிரயாக்ராஜ் கும்பமேளா அறியப்படும்.