TNPSC Thervupettagam

பிரிக்ஸ் உச்சி மாநாடு - ராமேஸ்வரம் கோவில்

September 15 , 2026 13 hrs 0 min 23 0
  • புதுடெல்லியில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் போது, தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலின் பின்னணியில் பிரிக்ஸ் தலைவர்களைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
  • சார் தாம் (Char Dham) புனிதத் தலங்களில் ஒன்றான ராமநாதசுவாமி கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும்.
  • இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்களில் தென்னிந்தியாவில் அமைந்துள்ள ஒரே ஜோதிர்லிங்கம் இதுவேயாகும்; மற்ற 11 ஜோதிர்லிங்கங்களும் இந்தியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் அமைந்துள்ளன.
  • ராமேஸ்வரம் சைவ மற்றும் வைணவப் பிரிவினர் இருவருக்குமே ஒரு முக்கியமான புனிதத் தலமாக விளங்குகிறது. பாரம்பரியமாகக் காசி-ராமேஸ்வர யாத்திரை காசியில் தொடங்கி ராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது.
  • இக்கோவிலின் 126 அடி உயரமுள்ள, ஒன்பது நிலைகளைக் கொண்ட கிழக்கு ராஜகோபுரம், தேவகோட்டை ஜமீன்தார் குடும்பத்தினரால் 1897 மற்றும் 1904 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
  • தமிழ்நாடு அரசின் கூற்றுப்படி, இப்புனிதத் திருக்கோவில் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை ஒரு துறவியின் பராமரிப்பில் இருந்தது; பின்னர் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் இக்கோவிலின் கட்டுமானம் மற்றும் விரிவாக்கப் பணிகளுக்குப் பங்களித்தனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்