அமெரிக்காவில் பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று இரண்டு நிர்வாக உத்தரவுகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
கர்ப்பிணியான வெளிநாட்டினர் தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்கக் குடியுரிமை கிடைப்பதற்காக, அங்கு சென்று பிரசவிப்பதை நோக்கமாகக் கொண்ட “பிறப்பு சுற்றுலா” (birth tourism) என்பதை இந்த உத்தரவுகள் குறிவைக்கின்றன.
வெளிநாட்டு அரசு ஊழியர்கள் மற்றும் அந்நிய நாட்டு எதிரிகள் என வகைப்படுத்தப்பட்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை உரிமைகளைக் கட்டுப்படுத்தவும் இவை முற்படுகின்றன.
பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் டிரம்பின் முந்தைய முயற்சியை நிராகரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 அன்றைய 6–3 என்ற தீர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிறப்புரிமைக் குடியுரிமையானது 14வது சட்டத்திருத்தத்துடன் தொடர்புடையது; அதன் குடியுரிமைப் பிரிவானது, அமெரிக்காவில் பிறந்த அல்லது இயல்புரிமை பெற்ற மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நபர்களுக்குக் குடியுரிமையை வழங்குகிறது.