TNPSC Thervupettagam

பீட் நில தீ விபத்துகள் - இந்தோனேசியா

September 9 , 2026 4 days 80 0
  • கடுமையான வறட்சி மற்றும் எல் நினோ வலுவடைந்து வருவதன் காரணமாக இந்தோனேசியாவின் பீட் நில தீ விபத்துகள் 2026 ஆம் ஆண்டில் தீவிரமடைந்து வருகின்றன, நிலத்தடி தீ கடுமையான மாசுபாட்டை உருவாக்குகிறது.
  • பீட் நிலத் தீ உலர் சதுப்பு நில மண்ணில் நிலத்தடியில் மெதுவாக எரிகிறது மற்றும் இது பல மாதங்கள் நீடிக்கும், இதனால் அவற்றை அணைப்பது கடினம்.
  • இந்தோனேசியாவில் உலகின் வெப்பமண்டல பீட் நிலங்களில் சுமார் 36% உள்ளது, முக்கியமாக கலிமந்தன், சுமத்ரா மற்றும் பப்புவாவில் உள்ளது.
  • பீட் நிலத் தீ மற்ற வெப்பமண்டல காடுகளின் தீயை விட 3 மடங்கு அதிக நுண் துகள்களையும், 2 மடங்கு அதிக மீத்தேன் மற்றும் கார்பன் மோனாக்ஸைடையும் உருவாக்கும்.
  • தீ விபத்துகளைக் கண்காணிக்க MODIS (மிதமான தெளிவுத்திறன் கொண்ட படமாக்கும் ஸ்பெக்ட்ரோரேடியோமீட்டர்) மற்றும் VIIRS (காணக்கூடிய மற்றும் அகச் சிவப்பு கதிர்வீச்சு படமாக்கும் ரேடியோமீட்டர் தொகுதி) செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப் படுகின்றன; இருப்பினும், அடர்த்தியான புகை மிகக் கடுமையான தீ விபத்துகளை மறைத்து விடக் கூடும்.
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் தொடக்கத்தில் இந்தோனேசியாவின் சுமார் 90% பகுதிகளில் மிகக் குறைந்த மழையோ அல்லது மழையோ பெய்யவில்லை, அதே நேரத்தில் சிபோங்கி (SiPongi) அமைப்பு ஆகஸ்ட் 31 அன்று 946 தீப் புள்ளிகளைப் பதிவு செய்து ள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்