இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பீமா சுகம் வலை தளத்தினைத் தொடங்கியுள்ளது.
பீமா சுகம் நுகர்வோர், காப்பீட்டாளர்கள், முகவர்கள் மற்றும் இடைத்தரகர்களுக்கான ஒற்றை நிலை டிஜிட்டல் காப்பீட்டுச் சந்தையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தளமானது பயனர்கள் அனைத்து வகையான காப்பீட்டுக் கொள்கைகளுக்கான உரிமைக் கோரல்களை ஒப்பிடவும், வாங்கவும், புதுப்பிக்கவும் மற்றும் இறுதியில் தீர்வு காணவும் வழி வகுக்கும்.