ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது தற்போது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) தொகையில் 75% தொகையினை வேலை வாய்ப்பு இழப்புக்குப் பிறகு உடனடியாக திரும்பப் பெற அனுமதிக்கிறது.
வேலைவாய்ப்பின்மை ஏற்பட்ட நாளிலிருந்து ஓராண்டிற்குப் பிறகு மீதமுள்ள 25% EPF தொகையை திரும்பப் பெறலாம்.
இந்தப் புதிய விதிகள் ஆனது ஊழியரின் 10 ஆண்டு கால சேவைப் பதிவில் இடையிடாமல் இருப்பதையும் ஓய்வூதியத் தகுதி பேணப்படுவதையும் உறுதி செய்கின்றன.
வேலைவாய்ப்பிழந்த பிறகு பணம் எடுக்கும் காலம் இரண்டு மாதங்களிலிருந்து ஓராண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் தொலைதூர உறுப்பினர்களுக்கான ஆயுள் சான்றிதழ் சரி பார்ப்பு தற்போது தபால் சேவைகள் மூலம் வீட்டிலேயே செய்யப்படும்.