பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையானது வெவ்வேறு அமைச்சரவைக் குழுக்களை மாற்றியமைத்துள்ளது.
முக்கியமான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் முதலீட்டு விவகாரங்கள் குறித்து இறுதி முடிவினை மேற்கொள்ளும் அமைப்பாக செயல்படும் வகையில் எட்டு அமைச்சரவைக் குழுக்கள் உள்ளன.
எனினும் முக்கிய அமைச்சர்களின் அதிகாரப் படிநிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்த நிலையில் அரசின் இரண்டாவது அதிக அதிகாரமிக்க நபராக உள்துறை அமைச்சர் அமித் சா தொடர்ந்து செயல்படுவார்.
இவர் எட்டு அமைச்சரவைக் குழுக்களிலும் உறுப்பினராக உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி எட்டுக் குழுக்களில் ஆறு குழுக்களுக்கு தொடர்ந்து தலைமை தாங்குவார்.
அவை, நியமனங்கள், பொருளாதார விவகாரங்கள், அரசியல் விவகாரங்கள், பாதுகாப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியனவாகும்.