இந்தியக் குடியரசுத் தலைவர் ஐந்து மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.
தெலுங்கானா
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
ராஜஸ்தான்
கல்ராஜ் மிஸ்ரா
மகாராஷ்டிரா
பகத் சிங் கோஷ்யாரி
இமாச்சலப் பிரதேசம்
பண்டாரு தத்தாத்ரேயா
கேரளா
ஆரிஃப் முகமது கான்
2010 ஆம் ஆண்டு முதல் பிரிக்கப்படாத ஆந்திராவின் ஆளுநராக இருந்த ஈ எஸ் எல் நரசிம்மன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பைக் கவனித்து வந்தார்.
அவருக்குப் பதிலாக டாக்டர் தமிழிசை ஆளுநராக பதவி ஏற்க இருக்கின்றார்.
தமிழ்நாட்டிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண்மணி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவார்.
ஜோதி வெங்கடாச்சலம் தமிழ்நாட்டில் இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார்.
அவர் கேரளாவின் ஆளுநராக இருந்தார் (1977 முதல் 1982 வரை).