TNPSC Thervupettagam

புதிய கங்கை வெள்ளப்பெருக்கு சமவெளி விதிகள் 2026

August 15 , 2026 3 days 52 0
  • கங்கையின் வெள்ளப்பெருக்கு சமவெளியை மறுவரையறை செய்து, கங்கை நதி (புத்துயிரூட்டல், பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) ஆணையங்கள் ஆணை, 2016-ஐ மத்திய அரசு திருத்தியுள்ளது.
  • இந்தத் திருத்தம் "கட்டுமானமில்லா மண்டலம்" (construction-free zone) என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, செயல்படும் வெள்ளப்பெருக்கு சமவெளி, ஒழுங்குமுறை மண்டலம் (regulatory zone) மற்றும் எச்சரிக்கை மண்டலம் (warning zone) ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.
  • செயல்படும் வெள்ளப்பெருக்கு சமவெளி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதியாகும்.
  • ஒழுங்குமுறை மண்டலம் என்பது 5 முதல் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை உள்ளடக்கியது, அதே சமயம் எச்சரிக்கை மண்டலம் 25 முதல் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தை உள்ளடக்கியது.
  • மாசுபாட்டைக் குறைக்கவும், இயற்கையான நிலத்தடி நீரை பாதுகாக்கவும் கங்கை கரைகள் மற்றும் வெள்ளப்பெருக்கு சமவெளிகள் பராமரிக்கப்பட வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்