மேகாலயாவில் ஸ்கிஸ்டுரா டென்சிக்லாவா என்ற புதிய குகை வாழ் மீன் இனம் ஆனது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பு மௌசின்ராம் அருகே அமைந்துள்ள க்ரெம் மௌஜிங்பூயின் எனும் ஒரு குகையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது வடகிழக்கு இந்தியாவிலிருந்து கண்டறியப்பட்ட ஒன்பதாவது புதிய மீன் இனம் ஆகும்.
மேலும், இது மேகாலயாவில் அறியப்பட்ட, ஆறாவதாகக் கண்டறியப்பட்ட குகை வாழ் மீன் ஆகும்.
பெரும்பாலான குகை வாழ் மீன்கள் பல தலைமுறைகளாகத் தங்கள் பார்வைத் திறன் மற்றும் நிறமியை இழக்கின்றன என்பதால் இவை மிகவும் இருண்ட நீர்ப் பகுதியில் இயங்குவதற்கு காட்சி/பார்வை சாராதப் புலன்களைச் சார்ந்துள்ளன.
உலகளவில் மேகாலயா குகைகள் அதிகம் காணப்படும் பகுதிகளில் ஒன்றாகும் என்ற ஒரு நிலையில் இங்கு 1,700க்கும் மேற்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட குகைகள் உள்ளன.