புதிய குவாட் (நான்கு நாடுகள்) குழுமம் – மேற்கு ஆசியா
October 21 , 2021 1380 days 635 0
இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தனது வெளியுறவு அமைச்சர்களின் முதல் சந்திப்பினை நடத்துவதன் மூலம் “ஆப்ரஹாம் உடன்படிக்கை” உருவாக்கிய உத்வேகத்தினைக் கட்டமைக்கத் தயாராக உள்ளன.
இந்தச் சந்திப்பானது மேற்கு ஆசியாவில் “புதிய குவாட் குழுமம்” என விவரிக்கப் படுகிறது.
இந்தச் சந்திப்பானது 4 நாடுகளை ஒரே நடைமுறையில் ஒருங்கிணைத்த ஒரு முதல் சந்திப்பு ஆகும்.
இந்தச் சந்திப்பானது பாதுகாப்பு, இணைப்பு மற்றும் ஆற்றல் உள்ளிட்ட பகுதிகளில் ஒத்துழைப்பின் மீது ஈடுபாடு செலுத்தும் புதிய பலதரப்பு மற்றும் பன்முகக் கட்டமைப்புகளை உருவாக்கும் இந்திய நாட்டின் முயற்சியுடன் ஒன்றிணைக்கப் படும்.