TNPSC Thervupettagam

புதிய சலுகைகளுடன் இணைக்கப்பட்ட கடன் திட்டங்கள்

January 6 , 2026 2 days 51 0
  • இந்திய அரசு ஆனது ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தின் (EPM) கீழ் இரண்டு சோதனைத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டங்கள் ஆனது EPM திட்டத்தின் நிதி ஆதரவுப் பிரிவான நிர்யாத் புரோட் சஹான் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • வட்டி மானியத் திட்டம் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதிக் கடனில் 2.75% வட்டி ஆதரவை வழங்குகிறது.
  • பிணையக் கடன் ஆதரவுத் திட்டம் ஆனது குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE) மூலம் 10 கோடி ரூபாய் வரை கடன் உத்தரவாதங்களை வழங்குகிறது.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட EPM ஆனது, 25,060 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் ஆறு ஆண்டுகள் வரை செயலில் இருக்கும்.
  • ஏற்றுமதியை மலிவானதாக்குதல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களை (MSME) ஆதரித்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் உலகளாவிய ஏற்றுமதி போட்டித் தன்மையை மேம்படுத்தச் செய்தல் ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்