தமிழ்நாடு முதலமைச்சர் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் தேதியன்று தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்விக் கொள்கையை வெளியிட்டார்.
இந்தக் கொள்கையானது, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியை மட்டுமே அனுமதித்து, இருமொழி கொள்கை முறையினை மீண்டும் வலியுறுத்துகிறது.
இது மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக ஆக்கப்பூர்வமான கற்றலை ஊக்குவிப்பதோடு, கல்விக் கற்றலை உடல் பயிற்சியுடன் ஒருங்கிணைக்கிறது என்பதோடு மேலும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்ட நீதிபதி D. முருகேசன் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டது.
கல்வியாண்டின் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒரு சிறார் ஐந்து வயதினை நிறைவு செய்தால் மட்டுமே, 1 ஆம் வகுப்பிலிருந்து முறையான பள்ளிப்படிப்பு தொடங்கும்.
இந்த ஆண்டு முதல் 11 ஆம் வகுப்புக்கான பொது/வாரியத் தேர்வு நீக்கப்பட்டுள்ளது என்பதோடு மேலும் நூறு சதவீத மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர வேண்டும் என்பதே இதன் குறிக்கோள் ஆகும்.