TNPSC Thervupettagam

புதிய வனவிலங்கு டி.என்.ஏ பரிசோதனைப் பகுப்பாய்வு ஆய்வகம்

October 29 , 2021 1319 days 547 0
  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் இந்தியாவின் முதலாவது மாநில அரசிற்குச் சொந்தமான வனவிலங்கு டி.என்.ஏ பரிசோதனைப் பகுப்பாய்வு ஆய்வகத்தினைத் திறந்து வைத்தார்.
  • இந்த ஆய்வகமானது மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பிராந்திய தடய அறிவியல் ஆய்வகத்தில் திறக்கப்பட்டது.
  • தற்போது டேஹ்ராடூன் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் 2 வனவிலங்கு டி.என்.ஏ பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
  • இவை முழுவதும் மத்திய அரசிற்குச் சொந்தமானவை.
  • புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த ஆய்வகமானது இந்தியாவில் மாநில அரசிற்குச் சொந்தமான முதல் ஆய்வகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்