புதிய வளர்ச்சி வங்கி – புதிய உறுப்பினர்கள்
September 5 , 2021
1371 days
673
- BRICS குழும நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கியானது ஐக்கிய அரபு அமீரகம், உருகுவே மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை தனது புதிய உறுப்பினர்களாக இணைத்துள்ளது.
- புதிய வளர்ச்சி வங்கியானது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
- இது BRICS அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) தொடங்கப்பட்டது.
- இந்த வங்கியானது இதற்கு முன்பாக “BRICS வளர்ச்சி வங்கி” என அழைக்கப்பட்டது.
- இதன் தலைமையகம் சாங்காய் நகரில் அமைந்துள்ளது.
- இந்த வங்கியின் முதலாவது பிராந்திய அலுவலகமானது தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் என்னுமிடத்தில் நிறுவப்பட்டது.
- இதனுடைய 2வது பிராந்திய அலுவலகமானது 2019 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டிலும் அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் நிறுவப் பட்டது.
- உறுப்பினர் நாடுகள் மற்றும் இதர வளர்ந்துவரும் நாடுகளில் மேம்பாட்டிற்கான வளங்களை இந்த வங்கி திரட்டுகிறது.

Post Views:
673