இந்தியா மற்றும் மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பரிமாற்றம் செய்யும் நோக்கத்திற்காக வேண்டி ஒரு பரிமாற்ற இடைத் தொடர்பை அமைப்பதற்காக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இதற்கானச் சந்திப்பின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்மொழியப் பட்டன.
அவற்றுள் ஒன்று, ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு (OSOWOG - One Sun, One World, One Grid) என்ற ஒரு திட்டத்தின் கீழான பரிமாற்ற இடைத் தொடர்பிற்கானது, மற்றொன்று ஆற்றல் ஒத்துழைப்பிற்கான ஒரு ஒப்பந்தம் ஆகும்.