மத்திய அரசானது, புதுப்பிக்கப்பட்ட வெளிநாடு வாழ் குடிமக்கள் (OCI) இணைய தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் புதுப்பிக்கப்பட்ட பயனர் இடைமுகம் ஆனது, வெளிநாடு வாழ் குடிமக்களுக்கு ஆன பதிவுச் செயல்முறையை எளிதாக்கும்.
இது ஏற்கனவே உள்ள ஐந்து மில்லியனுக்கும் அதிகமான OCI அட்டைதாரர்கள் மற்றும் புதிய பயனர்களுக்கு மேம்படுத்தப் பட்ட பாதுகாப்பு மற்றும் பயனர்களுக்கு உகந்த அனுபவத்தினை வழங்கும்.
இப்புதிய இணைய தளமானது ஏற்கனவே உள்ள URL தளத்தில்-https://ociservices.gov.in.-கிடைக்கிறது.
1955 ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம், 2005 ஆம் ஆண்டு OCI திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டமானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்களை இந்திய வெளிநாடு வாழ் குடிமக்களாகப் பதிவு செய்வதற்கு வழிவகை செய்தது.
இதனைப் பெறுவதற்கு, அவர்கள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆ தேதியன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவின் குடிமக்களாக இருந்திருக்க வேண்டும், அல்லது அந்தத் தேதியில் குடிமக்களாக மாறத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
இருப்பினும், பாகிஸ்தான் அல்லது வங்காளதேசத்தின் குடிமக்களாக இருந்தவர்கள் அல்லது அங்கிருந்து வந்தவர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி அல்லது கொள்ளு தாத்தா பாட்டிகள் பாகிஸ்தான் அல்லது வங்காளதேசத்தின் குடிமக்கள் எனில் அவர்களும் இதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.
தற்போதுள்ள OCI சேவைகள் தளமானது, 2013 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இது தற்போது வெளிநாடுகளில் உள்ள 180க்கும் மேற்பட்ட இந்திய தூதரகங்களிலும், 12 வெளிநாட்டினர் பிராந்தியப் பதிவு அலுவலகங்களிலும் (FRROs) செயல்பட்டு வருகிறது.
இது ஒரு நாளைக்குச் சுமார் 2,000 விண்ணப்பங்களைச் செயல்முறையாக்குகிறது.