TNPSC Thervupettagam

புதைபடிமம் சாரா எரிபொருள் மூலங்களிலிருந்து 40 சதவிகிதம் மின் உற்பத்தித் திறன்

December 5 , 2021 1610 days 562 0
  • இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அதன் 40% இலக்கை புதை படிம் சாரா எரிபொருள் மூலங்களிலிருந்துத் தயாரித்துள்ளன.
  • CoP 21 மாநாட்டில் இந்தியா தனது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்கீடுகளின் ஒரு பகுதியாக, 2030 ஆம் ஆண்டுக்குள் புதைபடிமம் சாரா எரிபொருட்களிலிருந்து 40% மின் உற்பத்தித் திறனை அமைக்கும் இலக்கை எட்டுவதற்கு இந்தியா உறுதியளித்தது.
  • 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இந்தியா தனது இலக்கை எட்டியுள்ளது.
  • இந்தியாவில் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் 150.05 GW ஆகும்.
  • அணுசக்தி சார்ந்த மின் உற்பத்தி திறன் 6.78 GW ஆகும்.
  • இது புதைபடிமம் சாரா எரிபொருள் அடிப்படையில் நிறுவப்பட்ட மொத்த ஆற்றல் திறனை 156.83 GW ஆக திரட்டியுள்ளது.
  • இது நிறுவப்பட்ட மொத்த மின் உற்பத்தித் திறனான 390.8 GW அளவில் 40.1% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்